காவல்துறை சட்டங்களை எவரும் மீற முடியாது!

பொலிஸ் சட்ட திட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்தவோ மீறவோ முடியாது என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாரிய வேலைத்திட்டங்கள் எமது நாட்டிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தொழிற்துறையை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில், அமைச்சின் செயலாளர் ஜகத். பீ.விஜேவீர, பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சிறி ஹெட்டிகே, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கலந்துக்கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த மூவர் விளக்கமறியலில்!
மன்னாரில் 424 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றவில்லை!
எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் - புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள...
|
|