காலநிலை மாற்றத்தின் எதிரொளி : துருவத்தில் அதிக வெப்ப நிலை பதிவு!

வட துருவத்தில் உள்ள வெப்ப நிலையானது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் சராசரி வெப்ப நிலையை விட ஐந்து டிகிரி அதிகமாக பதிவாகி கடந்தகால உச்சங்களை முறியடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற வெப்பநிலை, காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரித்துக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வட அட்லாண்டிக் பகுதியிலிருந்து வரும் வெப்பக் காற்று மற்றும் குறைந்து வரும் ஆர்டிக் கடல் பனி ஆகிய காரணங்கள் இந்த நிகழ்விற்கு பங்காற்றியுள்ளது.
தொழில்மயமாக்கலுக்கு முன், இதுபோன்ற ஆர்டிக் நிகழ்வை ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி கண்டிருக்கலாம். ஆனால், தற்போதைய மாதிரிகள் அடிப்படையில் ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கும் இந்நிகழ்வு நடைபெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தீக்காயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு!
அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் - யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர...
|
|