ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிப்பு!

2003 ஆம் ஆண்டு டயகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்திற்காக நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2003.08.06 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தக் கொலை சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அக்கரைப்பத்தனையிலிருந்து 10 கி.மீ தூரத்திலிருக்கும் டயகமவில் ஆறு பிள்ளைகளின் தந்தையான சந்தனம் மைக்கல் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மரணமடைந்தவரின் மனைவியான திருமாள் ராஜேஸ்வரி வழங்கிய சாட்சியின் அடிப்படையிலேயே குறித்த மூவருக்கும் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெருமாள் மகாலிங்கம் (60), பாலகிருஷ்ணன் சுகனேஸ்வரன் ( 32), மகாலிங்கம் சிவனேஸ்வரன் (வயது 37) ஆகியோருக்கே நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|