ஏரியில் வீசப்பட்ட குழந்தை : தாயானார் பெண் பொலிஸ் அதிகாரி!

மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரிகள் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். அந்தப் பெண் குழந்தையின் தாய் எனவும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏரியில் மீட்கப்பட்ட குழந்தையை மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்நிலையில் பெண் பொலிஸ் அதிகாரிகள் அந்த குழந்தை குளிப்பாட்டி பால் கொடுத்து பராமரித்துள்ளனர்.
எனினும் குறித்த குழந்தை அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
அரசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!
60 வயதுக்கு மேற்பட்டோரின் உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – தடுப்பூசியில் மன்னுரிமை வழங்குமாறு ப...
பொருளாரத்தில் மீட்சி ஏற்படுமாயின் வாகன இறக்குமதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் - மத்திய வங்கி ஆளுநர் ...
|
|