எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக ‘கியான்ட்’ புயல் நாட்டின் வடகிழக்கு திசையில் சுமார் 700 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இதனால் நாட்டிற்கு எந்த நேரடித் தாக்கமும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிற்பகல் 2.00 மணியின் பின்னர் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்க முடியும்.
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
இலங்கையில் ஆயுட்காலம் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம்!
இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் திட்டத்தின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் - பிரதமர...
அறுபது வகையான மருந்துகளின் புதிய விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
|
|