உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் இலங்கை விஜயம்!

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவரான எனட் டிக்சன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு மூன்றாவது முறையாக தற்போது விஜயம் செய்வதாக, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதன்படி இன்று நாட்டிக்கு வந்துள்ள எனட் டிக்சன் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், வடக்கில் மேற்கொள்ளப்படும் சில வேலைத் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளதாக கூறப்படுகின்றது.
Related posts:
அதிவேக வீதிகளுக்கு அதிரடி படையினர் பாதுகாப்பு!
மானிய விலையில் அத்தயாவசிய பொருட்கள் : கிளிநொச்சி மக்களுக்கு அரச அதிபரின் விசேட அறிவிப்பு!
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் - இராஜாங்க அமை...
|
|