உருளைக்கிழங்கு இறக்குமதி வரியை அதிகரிக்க கோரிக்கை!

அரசு உருளைக்கிழங்கு இறக்குமதி வரியை அதிகரிப்பதன் ழூலம் குடாநாட்டு உருளைக்கிழங்குச் செய்கையாளர்கள் அதிக நன்மையடைவார்கள் அடத்த மாதம் உருளைக்கிழங்கு அறுவடைக்காலத்தில் என்று யாழ்ப்பாணம் மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தலைவர் இ.தெய்வேந்திரம தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: தற்போது உருளைக்கிழங்குப் பயிர்கள் ஓரளவு நல்ல நிலையல் உள்ளன பெரும்பாலும் அடுத்த மாதத்தில் அறுவடைக் காலத்தில் செய்கையாளர்கள் உருளைக்கிழங்கை சந்தைப்படுத்தவதற்கு வசதியாக கடந்த வருடத்தைப் போன்று இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் இது தொடர்பான கோhரிக்கை மனு ஒன்றையும் அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளேம் என்றார்.
Related posts:
வடக்கு நிர்வாகம் 2010 இற்கு பின்னர் சரியாக இயங்கவில்லை!
செலவீனங்களை ஈடுகட்டவே 72% க்கும் அதிகமான ஒதுக்கீடு - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
மார்ச் 20 ஆம் திகதியுடன் முடிவடையும் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் - அனைத்து உள்ளூராட்சி மன்றங...
|
|