இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம், நல்லூர் – சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (வயது – 20) என்ற இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மாணவி, கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலிகாமம் மேற்கில் புகையிலை செய்கைக்கு வருகிறது தடை!
நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இணங்கி செயற்பட தயார் - பிரதமர் மஹ...
நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னோக்கி நகர்கின்றது - மத்திய வங்கியின் அறிவிப்பு!
|
|