இலங்கை முதலீட்டு சபை நிறுவனங்களின் உற்பத்தி ஊரடங்கு காலத்திலும் தொடரும் என அறிவிப்பு!

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச்சபை தொழிற்சாலைகள் ஊரடங்கு காலத்திலும் எவ்வித இடையூறுமின்றி இயங்குமென உறுதியளித்துள்ளது.
கட்டுநாயக்க, பியகம, வத்துபிட்டிவல, மல்வத்த மற்றும் மீரிகம ஆகிய ஏற்றுமதி வலயங்களிலுள்ள நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடரும் என்பதுடன் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் கண்டிப்பாக கடைப் பிடிக்கப்படும் என ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட வலயங்கள் தவிர்ந்த வெளியிடங்களில் அமைந்துள்ள முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளும் இயங்கவுள்ளன.
இதேவேளை ஊரடங்கு குறித்த முதலீட்டு சபையின் நடைமுறைகள் அதன் www.investsrilanka.com. இணையத்தளத்தில் உள்ளதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முறிந்த மின்கம்பம் இன்னும் சீர்செய்யப்படவில்லை!
அம்பாறையில் கறுப்பு பூஞ்சை தொற்று தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - விசேட வைத்தியர் உப...
இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விவகாரம் – ஐ.நா கூட்டத்தொடரில் கலந்து...
|
|
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!
அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டை இறக்குமதி - இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ...
அரச நிர்வாக மட்டத்திலான அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வி...