இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் மக்கள்!

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் கொழும்பு, நகர மண்டப பகுதியில் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு நகரத்தை ஸ்மார்ட் நகரமாக்கும் நோக்கில் மொபிடெல் நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதிவேக இணையத்தளவசதி மற்றும் இயந்திரத்தின் ஊடாக குளிர் பானங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி இதில் காணப்படுகின்றது.
அத்துடன், அருகில் உள்ள பேருந்துகள், ரயில் நிலையங்கள், வங்கிகள் தொடர்பில் முழு விபரங்களையும் அறியக்கூடியவாறு குறித்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த ஸ்மார்ட் பேருந்து நிலையத்திற்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அதிகளவிலானோர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன்முதலாக கொழும்பில் இந்த ஸ்மார்ட் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டமையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|