இலங்கையில் ஒரே தடவையில் 6 குழந்தைகளை பிரசவித்த தாய்!

இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், இன்று (21) அதிகாலை பதிவாகியுள்ளது.
அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவரே, ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, 3 ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் அவர் பிரசவித்துள்ளார்.
இவற்றில் இரண்டாவதாக பிறந்த குழந்தை மாத்திரம் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
000
Related posts:
பேருந்து போக்குவரத்து மக்கள் மயப்படுத்தப்பட்டு 60 வருடங்கள் நிறைவு!
மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வி...
ஓமானின் வர்த்தக, கைத்தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அ...
|
|