இலங்கைக்கு இந்தோனேஷியா உதவி!

Friday, February 24th, 2017

இலங்கையில் பலபிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்களுக்காக 5 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசியினை நிவாரணமாக வழங்க இந்தோனேஷியா அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தோனேஷிய வௌவிவகார பிரதி அமைச்சர் எ.எம்.பஷீர் இடையில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. ஐனாதிபதி காரியாலயத்திலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ,

இந்தோனேஷியா அரசால் இந்நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கவுள்ள உதவி தொடர்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். மேலும் ,இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோவிடோடா , அந்நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துள்ளதாக இதன்போது கருத்து தெரிவித்த இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Related posts:

சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்தில் மீண்டும் நாட்டுக்கு அழை...
வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக...
பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட...