இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன் வழங்கவேண்டும் – சுப்பிரமணிய சுவாமி தெரிவிப்பு!

இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன்களை வழங்குவதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
இந்து சமுத்திரத்தில் இந்தியா தனக்கு நீண்ட கால சகா ஒருவர் தேவை என கருதினால் இந்தியா தற்போது ராஜபக்ச அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒத்திவைக்கப்பட்ட வட்டி கடனாக வழங்கவேண்டும்,
அல்லது சீனாவிற்கு இளைய சகா ஒருவர் கிடைக்கும் நிலையை எதிர்கொள்ளவேண்டும்.
மோடி அரசாங்கம் பல வெளிவிவகார கொள்கைகளில் தோல்வியடைந்துள்ளது இலங்கை இன்னொன்றாக இருக்கவேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பொதுவிடங்களில் காணப்பட்ட பார்த்தீனியக் களைகள் முற்றாக இல்லாதொ...
வெள்ளை சீனியின் விலையை உயர்த்த முடியாது..
வடக்கில் தரப்படுத்தப்படவுள்ள ப.நோ.கூ.சங்கங்கள்!
|
|