“ஆவா” க்கு போட்டியாக “தாரா” !

வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவைத் தொடர்ந்து, வடமராட்சிப் பகுதியில் தாரா எனும் குழு பிரசித்தமடைய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வடமராட்சியில் மேற்கோள்ப்பட்ட பல கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளில், தாரா குழு எனும் கொள்ளை கும்பல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இக்கும்பலின் முக்கிய சந்தேக நபரொருவர் கைதாகி, பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இக்கும்பலின் ஏனையவர்களும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
பொலிஸ் இடமாற்றத்தில் அரசியல் அழுத்தம் இல்லை -அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிப்பு!
48 மணி நேரத்தின் பின்னர் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் - அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...
கந்தரோடையில் ஆயுத முனையில் அச்சுறுத்தி பெரும் நகைக் கொள்ளை – மூவர் சந்தேகத்தில் கைது!
|
|