அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதிக்குத் தண்டம்!

வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று 12 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி பொலிஸார், வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அளவுக்கு அதிகமான பயணிகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றார் என்ற குற்றச்சாட்டுடன் வாகனச் சாரதி ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கினை விசாரித்த நீதிவான் வழித்தட அனுமதிப் பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் சென்றமைக்கு 10 ஆயிரம் ரூபாவும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாவுமாக 12 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
நாளை முதல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரச்சனைக்குட்பட்டவர்களுக்கு உதவும் நடமாடும் சேவை !
தொழில் நுட்ப கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!
பொருளாதார நடவடிக்கை செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் கொள்கை ரீதியான வட்டி வீதம் மீண்டும் குற...
|
|