அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!

ஒருவர் ஐந்து சிம் அட்டைகளை விட அதிகமாக வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், அனைத்து தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் இணைத்து பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில் வைக்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு நபர்களின் பெயரில் மொபைல் போன் சிம்களை வாங்குவதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பக்திபூர்வமாக இடம்பெற்ற குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய இரதோற்சவம்
எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கும்!
ஆதாரங்களுடன் ஊழல் மோசடிகள் தொடர்பாக அறிவித்தால் உடனடி நடவடிக்கை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!
|
|