ஃபிஃபா முன்னாள் தலைவர் காலமானார்!

உலக கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவின் முன்னாள் தலைவர் ஜோவா ஆவ்வலாஞ்சி தனது நூறாவது வயதில் காலமானார்.
கால்பந்து விளையாட்டை பல பில்லியன் டாலர் மதிப்பு சர்வதேச நிறுவனமாக்கிய பெருமை மற்றும் உலக கால்பந்து போட்டியை 16 லிருந்து 32 அணிகள் பங்கேற்க வைத்த பெருமை இவரையே சேரும். ஆனால் இவரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
2013 ஆம் ஆண்டு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து ஃபிஃபாவிலிருந்து ராஜிநாமா செய்தார். முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீரரான இவர், ஒலிம்பிக் போட்டிகளை ரியோவில் நடத்துவதற்கான முயற்சிகளில் ரியோவுக்கு ஆதரவாக திறம்பட பணியாற்றினார். தற்போதைய ஒலிம்பிக் மைதானம் இவர் பெயரைக் கொண்டுள்ளது
Related posts:
சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வருக்கு தலா பத்தாயிரம் அபராதம் !
ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் காயம்!
ஜனாதிபதி அறிவுறுத்து - மேலும் 3 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை - இராணுவத் தளபதி ஜெனரல் சவ...
|
|