வரி அறவீடுகள் என்பது நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!

Thursday, September 5th, 2019


2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் மோட்டார் வாகனங்கள்மீது மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி வரித் திருத்தங்கள் காரணமாக அகற்றப்படாது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்ற வாகனங்களை அகற்றுவதற்கென விசேட தீர்வை தொடர்பில் கூறப்படுகின்றது.

இரண்டு வருட காலமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் ஓரிடத்தில் தேங்கிக் கிடப்பதென்பது இந்த நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தத் தக்க அழுத்தங்கள் குறித்து இதுவரையில் அவதானங்கள் செலுத்தப்படாத ஒரு நிலையே இருந்துள்ளது.

வரி அறவீடுகள் என்பது இந்த நாட்டின் நடைமுறைக்கு எந்தவகையில் சாத்தியமாகும் என்பது குறித்து ஆராய்ந்து, மேற்கொள்ள வேண்டியதாகும்.

பிறநாடுகள் கூறுவதற்காகவும் அல்லது பிறநாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற வகையிலும் இந்த நாட்டில் வரி அறவீடுகளை மேற்கொள்கின்றபோது, அது எதிர்மறையான விளைவுகளையே கொண்டிருக்கும் என்பதற்கு, இந்த நாட்டிலே அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வரி அறவீடுகள் உதாரணமாக இருக்கின்றன.

குறிப்பாகப் புகையிலை உற்பத்தி வரியினை எடுத்துக் கொண்டால், இந்த நாட்டில் புகைத்தலைக் கட்டுப்படுத்துவதென்றால், சிகரெட் வகைகளின் விலைகளை அதிகரிப்பதே அதற்கான பொறிமுறை எனக் கூறப்பட்டு, அந்த பொறிமுறை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, கீழ் மற்றும் மத்திய வருமானம் ஈட்டுகின்ற நாடுகளில் 10 வீதமான அதிகரிப்பினை மேற்கொண்டால், புகைத்தலை 8 வீதமாகக் குறைக்கலாம் என உலக வங்கி உள்ளடங்கலாக சர்வதேச நிறுவனங்கள் பலவும் சுட்டிக் காட்டியிருந்தன.

என்றாலும், பீடி மற்றும் சட்ட விரோத வெளிநாட்டு சிகரெற் வகைகள் என்பன குறைந்த விலையில் கிடைக்கின்ற ஒரு சூழல் உருவாகியிருப்பதன் காரணமாக, வெளிநாடுகள் வெற்றி பெறுகின்ற மேற்படி பொறிமுறை, இலங்கையில் அதேயளவு சாத்தியமற்றது என்பது அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்; டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை ஃ நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை ஃ துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைஉற்பத்தி வரி விசேட எற்பாடு சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கெலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்...
கௌதாரிமுனை இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்திற்கு...
வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுக்கு நிதியுவி - வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!