வல்வெட்டித்துறையில் மீண்டும் நோயாளர் விடுதி – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, February 21st, 2022

வல்வெட்டித்துறை, ஊறணி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

தாதியர் பற்றாக்குறை காரணமாக குறித்த வைத்தியசாலையினன் நோயாளர் விடுதி(ward service) சேவை நிறுத்தப்பட்டிருந்ததுது.

இதனால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கு.கமலதாஸினால்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், குறித்த வைத்தியசாலையின் விடுதி சேவையை இயங்க வைப்பதற்கு தேவையான தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு ஏற்பாடு செய்தமையினால் குறித்த வைத்தியசாலையில் நோயாளர் விடுதியின் செயற்பாடுகள் சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

யாழ் மாநகர சபை பணியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா வலியு...
மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதார அச்சுறுத்தல் - அமைச்சர் டக்ளஸிடம் பிரதேச மக...
இந்திய வெளிவிவகார அமைச்சர் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு – வடக்கின் பல்வேறு...