வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலங்களுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய, பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்குறித்த இரண்டு ஆலயங்களுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கான தனது பிரதிநிதி என்று அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சீனத் தூதுவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பிரதமரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் வழங்கி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
மக்களுக்கு வெறும் உணர்ச்சிகளை திணிப்பவர்கள் ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுவதாக இல்லை - நாடாள...
கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ...
|
|
உயிர் நீத்தோரை மட்டுமன்றி, உயிர்வாழப் போராடுபவர்களையும் நினைத்துப்பார்த்து உதவிட முன்வர வேண்டும் - ...
பாதுகாப்பற்ற ரயில் கடவை பணியாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்...
‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கி...