வடக்கு – கிழக்கில் “கள்” இறக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – டக்ளஸ் தேவானந்தா!

பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து “கள்” இறக்கப்படுவதற்கு அரசால் விதிக்கப்பட்ட தடை தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவிர அகியோருடன் கலந்துரையாடி குறித்த தொழில்சார் வல்லுநர்களுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளார்.
கொழும்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம்(30) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடக்கு – கிழக்கு பகுதியில் வாழும் குறித்த தொழில் வல்லுநர்கள் அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதான தொழில் நடவடிக்கையால் அதனை நம்பிவாழும் குடும்பங்கள் தற்போது அச்சமடைந்துள்ளன.
வடக்கில் குறித்த தொழில் தடை நடைமுறைக்கு வருமாயின் அதனை நம்பிவாழும் 12 ஆயிரம் குடும்பங்கள் பேரவலத்தை சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு உள்ளாகவேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இதுவிடயத்தில் உரிய கவனம் செலுத்தி குறித்த தொழித்துறை சார்ந்தவர்களது குடும்பங்களின் நிலைமையை கருத்தில்கொண்டு சாதகமான முறையில் பரிசீலிக்கவேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக குறித்த தொழில் துறைசார்ந்த வல்லுநர்கள் கவலை அடையவோ அன்றி அச்சமடையவோ தேவையில்லை எனவும் குறித்த பிரச்சினைக்குரிய தீர்வை பெற்றுத்தருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|