யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைப்பு!

Thursday, September 29th, 2022

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்காக புதிதாக அமைக்கப்பட்ட குறித்த புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டிடத் தொகுதியை சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தார்.

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதியின் திறப்பு விழா நிகழ்வுகள் இன்று காலை 9 மணியளவில் பாடசாலை அதிபர் வாசுகி தவபாலன் தலைமையில் இடம்பெற்து.

இந்நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், வட மாகாண கல்விப் பணிப்பாளர்.உதயகுமார், யாழ்ப்பாண வலயக் கல்வி பணிப்பாளர் .இராதாகிருஷ்ணன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நிரந்தர தீர்வு பெற்றுத் தாருங்கள்: டக்ளஸ் எம்.பி.யிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!
மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம் – திருமலையில் அ...
கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர் சங்கங்கள் கோரிக்...

வடக்கு வீதியில் அதிக கெடுபிடி : அங்கலாய்க்கின்றனர் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...
மக்களின் விருப்பத்தை சிதைக்க எந்தவொரு சக்தி முனைந்தாலும் அனுமதிக்க மாட்டேன்: செம்பியன்பற்று மக்களுக்...
கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உற...