மயிலிட்டி மீன்பிடித் துறைமுக காவல் பணியாளர்கள் இருவர் நியமனம் – கடிதங்களை வழங்கிவைத்தார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கான காவல் பணியாளர்கள் இருவருக்கான நியமனக் கடிதங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
யுத்தம் காரணமாக சுமார் இருபது வருடங்களுக்கு அதிகமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த மயிலிட்டித் துறைமுகம், கடந்த ஆட்சிக்காலத்தில் மீண்டும்புனரமைக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த துறைமுகத்தினை வினைத்திறனாக செயற்படுத்தி பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டமிடல்கள் ஏதும் இன்றி, அரசியல் நலன்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டு மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால், மயிலிட்டி துறைமுகத்தினை பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் செயற்படுத்துவதற்கு பலவேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், துறைமுகத்திற்கு தேவையான காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|