பேலியகொட மீன் சந்தையின் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்கவும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு !

Monday, December 2nd, 2019

பேலியகொடயில் அமைந்துள்ள மத்திய மீன் விற்பனைச் சந்தை கட்டிடத்தொகுதியின் வெளிப்புற வீதிக் கட்டமைப்பின் மறு சீரமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு கால்வாய் புனரமைப்புப் போன்ற பணிகளை விரைந்து முன்னெடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் கலந்துக் கொண்டிருந்த அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது இராஜாங்க அமைச்சர் சணத் நிசாந்த பெரேரா, அமைச்சின் செயலாளர் திருமதி. ஆர்.எம்.ஐ. இரத்னாயக்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசண்ண ரனவீர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் துறைசாரா அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்தக்காரர்கள், சந்தைத்தொகுதி விற்பனை நிலைய ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Related posts:


பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் அரசு உரிழய கவனம் செலுத்தவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
கல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பே...
வவுனியாவில் ஈ.பி.டி.பி. செயற்பாடுகளை செழுமைப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!