நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி பெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 23rd, 2020

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நல்லை ஆதீன முதல்வரை  சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

இன்று காலை  நல்லை ஆதினத்தக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் குரு முதல்வருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது ஆறுதிருமுருகன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: