தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு!

இலங்கை அரச ஊடக நிறுசனமான லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான வடக்கின் உதயம் மற்றும் குட்டிச் சுட்டி ஆகியவற்றை வெளியீட்டு வைக்கும் நிகழ்வு அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெறது.
நிகழ்வுக்கு சென்றிருந்த அதிதிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஶ்ரீசற்குணராஜா தலைமையிலான குழுவினரால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க முடியு...
சம்மந்தனின் ஆருடம் மீண்டும் பொய்த்துவிட்டது - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு – பிரதேச அபிவிருத்தி கு...
|
|