தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் இ்ன்று(13.09.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றியை தெரிவித்த நிலையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றுகின்றவர்களுக்கு, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியல் பயம் கொண்டவர்களினாலேயே அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது: இளைஞர் மாநாட்டில் அமைச்சர் டக...
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்கள் அவசியம் பின்பற்றப்பட வேண்டும் - அரசாங்கம் ...
யானை - மனித மோதல்களை குறைக்க நவீன தொழில்நுட்பம் - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!
|
|