ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். குறித்த நிகழ்வில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு இந்து சமய கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களுக்கு பாதகம் ஏற்படும் செயற்றிட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்ட...
கரைவலை தொழிலில் 'வின்ஞ்' பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் - சங்கப் பிரதிநி...
கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்க ஏற்பாடு – கிளிந...
|
|