சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கின் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Monday, June 21st, 2021

கொறோனா அச்சுறுத்தல் நீங்கி நாட்டில் சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கு மாகாணத்தில்  உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களுடன்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவுச் சங்க நிர்வாகங்களின் பதவிக் காலம் நிறைவடைந்த போதிலும், கொறோனா பரவலினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அவற்றுக்கான புதிய நிர்வாகங்களை தெரிவு செய்ய முடியாத சூழல் காணப்படுகின்றது.

இதுதொடர்பாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், வடக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், கூட்டுறவுச் சங்க நிர்வாகங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பதன் மூலம், தற்போதைய அசாதாரண சூழலில் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின்  செயற்பாடுளையும் தடங்கல்  இன்றி மேற்கொள்ள  முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மூளாய் -அச்சுவேலிக்கான தனியார் சிற்றூ...
கடற்றொழில் துறையை மேம்படுத்தும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோ...
முல்லை கடலில் அமைச்சர் டக்ளஸின் ஒழுங்குபடுத்தலில் கூட்டு நடவடிக்கை - பலர் கைது, படகுகளும் கைப்பற்றப்...

இனவாதம் ஒரு நச்சு விதை : அது எத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப் பட்டாலும் அதனை அடக்க வேண்டும் - டக்ளஸ் ...
தொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைக்கு கூட தீர்வு காணமுடியாதவர் எப்படி நிரந்தர தீர்வை பெற்றுத் தருவார்...
மக்களின் தெரிவுகளே எதிர்காலத் தீர்மானிக்கும்: தீவக மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!