குருநகர் வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள வடகடல் நிறுவனத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு பணியாற்றும் உழியர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இதன்போது குறித்த நிறுவனத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறிப்பாக ஊழியர்களது ஊதியகொடுப்பனவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருக்கு ஊழியர்கள் தெரியப்படுத்தியிருந்தனர்.
குறித்த நிறுவனம் மற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட அமைச்சர் அதற்கான தீர்வுகளை காலக்கிரமத்தில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
35 அடிக்கு மேற்பட்ட நீளமான மீன்பிடி படகுகளுக்கு அரச மானியம் வழங்க நடவடிக்கை - டக்ளஸ் தேவானந்தா ஏற்பா...
தமிழ்த் தலைமைகளின் இன்றைய நிலைமை போலவே இருக்கின்றது இந்த நாடும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அரசியல் வேறுபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரச அதிக...
|
|
கூட்டமைப்பின் இரட்டைத் தோணி அரசியல் அவர்களையும் மூழ்கடித்து, தமிழ் மக்களையும் மூழ்கடித்துவிடும்!
அவசர காலச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்தா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. க...
சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பேருவளை துறைமுகத்தின் செயற...