காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Friday, December 17th, 2021

காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றபோது கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பூநகரிப் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 196 ஏக்கர் காணிகளை விவசாயப் பண்ணை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்றினால் விண்ணப்பித்தமை தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த விடயம் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்  ஆராயப்பட்ட நிலையில், மேற்குறித்த விடயத்தினை தெரிவித்த இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts:

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்ப டுகின்றன என்றால்  நாட்டைக் கெடுப்பவர்கள் யார்...
அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வடபகுதி முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுபெற்றுத் தருவேன் - அமைச்சர...

அனுபவங்களூடாக ஆற்றல்களை மேம்படுத்தி சமூக முன்னேற்ற த்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் -...
இரு மொழிக் கொள்கை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் - நாடாள...
கிளி. இல் கொரோனா சமூக தொற்றில்லை - பரவலை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த களத்தில் அமைச்சர் டக்ளஸ்!