ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் எப்போது அமைக்கப்படும்! நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா  கேள்வி! (வீடியோ இணைப்பு)

Friday, July 8th, 2016

இன்று வரையிலும் ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து செயற்படுகின்றது.

இந்நிலையில், ஒட்டுச்சுட்டான் பகுதி வாழ் மக்கள் தமது பிரதேச சபை தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக புதுக்குடியிருப்பு செல்ல நேரிடுவதாகவும் இதனால் குறித்த மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்துவருவதாகவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(7) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒட்டுசுட்டானில் பிரதேச சபை ஒன்றினை அமைத்து தருமாறு அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருக்கின்றனர். எனினும் அவர்களது கோரிக்கை இன்றளவிலும் நிறைவேறாமல் உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் பிரதேச சபை ஒன்றை அமைப்பதில் தடைகள் எதுவும் இருக்கின்றனவா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தடைகள் ஏதும் இருப்பின் அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, உரிய பிரதேசபை அமைக்கப்படுமா எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தபோது எம்மை விமர்சனம் செய்தோர்  இன்று அபிவிருத்திப் பணிகளில் த...
கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகா...
தமிழ்நாடு மாநிலத்தின் கடற்றொழிலாளர்களுக்கான தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பொன்னாடை போர்த்த...

கல்விச் செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்க...
வேலியே பயிரை மேய்கின்ற இத்தகைய நிலை எப்போது தகர்த்தெறியப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...