அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
தமது அமைச்சில் இன்றையதினம் சுபநேரத்தில் குறித்த அமைச்சை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றிருந்தார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்துகலாசாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த அமைச்சின் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா கடந்த 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அச்சம் கொள்ள வேண்டாம் – சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி ஆசிரியர்களிடம் டக்ளஸ் எம்.பி உறுதி!
ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கட்சியின் ஆலோ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை - மன்னார் நானாட்டானில் சதொச விற்பனை நிலையம் திறப்பு!
|
|