அமைச்சரவையில் பங்கெடுத்து ஒரு மாதத்தில் 10 அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்று பணிகளை முன்னெடுத்து வருகின்றேன் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

ஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுமுள்ளோம் என அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சத்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –
முக்கியமாக அடுத்தமாதம் முதல்வாரத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வீடுகளை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதால் அதற்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி வருகின்றோம். பல ஆண்டுகளாக கோரிக்கையாக இருந்த சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். அதுமட்டுமல்லாது வடக்கிற்கு விஷேடமாக வடக்கு அபிவிருத்தி அதிகாரசபை ஒன்றை ஏற்படுத்தவுள்ளோம்.
மேலும் தொழில் வாய்ப்புக்கள் இன்றி காணப்படும் எமது இளைஞர்கள் யுவதிகளுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். அதேபோல வடக்கு கிழக்கில் உள்ள குளங்களை புனரமைக்கவும். நிலத்தடி நீரைப்பாதுகாக்கவும் திட்டங்களை வகுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|