அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்வின் கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

அரசாங்கத்தினால் எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்விற்கான கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவிற்கு அமைய, கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தலா 3 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களும், வட்டாரங்களுக்கு தலா 4 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரின் எண்ணக்கருவிற்கு அமைவாக 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|